tamilnadu

img

தலித் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை ஐஐடி-யை முற்றுகையிட்டு மாதர்சங்கத்தினர் போராட்டம்

தலித் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐஐடி-யை முற்றுகையிட்டு மாதர்சங்கத்தினர் போராடத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த  பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னை ஐஐடி வேதியியல் துறையில்  ஆராய்ச்சி (பி.எச்டி) செய்து வருகிறார். இதேபிரிவில் ஆராய்ச்சி செய்து வரும்  மாணவர்கள் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் 2017ஆம் ஆண்டிலிருந்து பார்வதியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து புகார் தெரிவித்த பார்வதியை, பேரா.எடமன பிரசாத் சாதி ரீதியாக, அவமானப் படுத்தி, தொடர் தொந்தரவு கொடுத் துள்ளார். இதன்பிறகு, கல்வி வளாகம், ஆய்வுக்கூடத்திலும் வைத்து மாணவி பார்வதியை, கிங்ஷூக்தேப் ஷர்மா இரண்டு முறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.

கல்வி சுற்றுலா சென்ற இடத்தில், கிங்ஷூக்தேப் ஷர்மா, பார்வதியை அறைக்குள் அடைத்து  அந்தரங்க பகுதிகளை செல்போனில் படம் பிடித்துள்ளார். அதைக்காட்டி கிங்ஷூக்தேப் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள் பார்வதியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு  வந்துள்ளனர்.

இந்த தொந்தரவு தாங்காமல், 2020  ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி ஐஐடி உள்புகார் கமிட்டியிடம் பார்வதி புகார் செய்தார். இதை விசாரித்து   இடைக்கால அறிக்கையை நிர்வாகத் திற்கு புகார் கமிட்டி கொடுத்தது. அதில், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது. வக்கிரமாக நடந்து கொண்டது  போன்ற அம்சங்கள் உறுதிபடுத்தப் பட்டிருந்தது.  அதன்பேரில், குற்றம் சாட்டப் பட்ட மாணவர்கள் கல்வி வளாகத்திற் குள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால்,  குற்றவாளிகள் அனைத்து ஆன்லைன்  வகுப்புகளிலும் கலந்து கொண்டிருந்த னர். இதனால் மன உளைச்சல் அடைந்த பார்வதி மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சென்னை காவல் துறை ஆணையர், எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் உள்ளிட்டோருக்கு பார்வதி புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் பின்னர் தேசிய மகளிர் ஆணை யத்திற்கு புகார் அனுப்பினார். புகாரை ஏற்றுக் கொண்ட ஆணையம், வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர காவல்  ஆணையருக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி,  மலாய் கிருஷ்ண மகதோ, முனைவர் ரவீந்திரன், பேரா.எடமன பிரசாத், நாரா யண் பத்ரா, சௌர்வ தத்தா, அயன்  பட்டாச்சார்யா ஆகிய 8 பேர் மீது  ஐபிசி 354, 354பி, 354சி, 506(1) பிரிவுக ளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. வழக்கு பதிந்து 9 மாதங்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என  ஏற்கனவே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை ஐஐடி-யில் தலித் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை நிர்வாகமும், காவல்துறையையும் பாதுகாத்து வருகிறது என கூறி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஐஐடி-யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்