கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஊரடங்கு கால நிவாரணத்திற்கு கொடுக்க வேண்டிய அரிசியை லாரிகள் மூலம் கிராமப்புறங்களில் ரூ 500க்கு விற்கப்படுவதாகவும், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பிராகாஷ் தலைமையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.