மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த திருவாரூர் மாவட்டச்சேர்ந்த கர்ப்பிணி சியாமளாதேவிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பாராட்டினார்.
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கல்லூரியில் இயங்கும் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் குடிநீர் சுத்திக்கரிப்பு இயந்திரம் வாங்குவதற்கு ரூ.57.500-க்கான காசோலையை கல்லூரி மருத்துவமனை முதல்வர். கே. ரமாதேவியிடம் துணை பொது மேலாளர் கல்பனா வழங்கினார், அப்போது மண்டல மேலாளர் சீதாராமன், மருத்துவ கல்லூரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் சீனிவாசன்,கல்லூரி நிர்வாக அலுவலர் கவிஞர் ம. ரா. சிங்காரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.