கடலூர் பேருந்து நிலைய சிறப்பு நூலகம் வெறிச்சோடியது
கடலூர், ஜூன் 11 - கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பேருந்து நிலை யத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த சிறப்பு நூலகம் புதன்கிழமை (ஜூன் 11) வெறிச்சோடிக் காணப்பட்டது. வந்து செல்லும் பயணிகள் காத்திரு க்கும் நேரத்தை பயனுள்ள தாக்கவும், நூல் வாசிக்கும் திறனை அதி கரிக்கவும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்நூலகம் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், நூலகத்தில் 200க்கும் குறை வான புத்தகங்கள் மட்டுமே இருந்தன. புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரி கள் இல்லை, நூலகத்திற்கு கதவுகள் இல்லை என்ற குறைபாடுகள் இருந்தன. மறுநாள் (ஜூன் 11), பயணிகள் சென்று பார்த்தபோது நூலகம் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் வெறிச்சோடி இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளின் அலட்சி யத்தால் ஒரே நாளில் செயல்பாட்டுக்கு வந்த நூலகம் மறுநாளே காலி யாகிவிட்டது.