tamilnadu

img

காக்கைக் கூடு

கலாஸ்ரீ ஆனந்த்

ஹாரிஸ் அடுக்கு மாடி குடியிருப்புகளின் தன் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்கிறான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் நீ, நீயே புறப்பட்டு செல்ல தாயார் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் அவனது தாய், தலையை ஆட்டிக் கொண்டுபுறப்படுகிறான். அவ்வாறு வீட்டின் ஜன்னல் வழியே கொய்யா மரத்தின் உச்சி நிலையை பார்த்து வாறு லிப்ட்டில் இறங்கி வந்து மரத்தின் அடியில் நின்று கொய்யா பழங்கள் இருக்கின்றன வா என்று பார்க்கின்றான். பிறகு பள்ளிக்கு செல்கிறான், இவ்வாறு வழக்கமாக தினதோறும், சில சமயங்களில் காய் கனிகளை எடுத்து உண்ணுவது வழக்கம்.  ஹாரிஸ் பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் கொய்யா மரத்தின் பங்கு கிளைகள் இடையில் ஒரு காக்கை கூடு கட்டும் முயற்சியில் இருப்பதைக் காண்கிறான், அதனால் ஹாரிஸ் பூரிப்புக்கொண்டே தன் வீட்டுக்கு செல்கிறான், மறுநாள் அதற்கு மறுநாள் இரு காக்கைகள் கூட்டை சிறிது சிறிதாக கட்டிக்கொண்டு இருப்பதைக் கவனிக்கிறான்.  ஒரு நாள் இரண்டாம் தள தன் வீட்டிலிருந்து காக்கைகள் இரண்டு கூட்டை முழுவதுமாய் கட்டி இருப்பதைக் கவனிக்கிறான். இடையூறு ஏற்படா வண்ணம் மரத்தின் மீது ஏறி காய் கனிகளை பறிக்கவோ கூடாது என்று மிக அருகில் குடியிருக்கும் நபரிடம் ஹாரிஸ் கேட்டு கொள்கிறான். அந்த மரம் இரண்டு குடியிருப்பு களின் மத்தியில் மதில் சுவர் ஓரமாக உள்ளது, கீழே சிமெண்ட் தரை போடப்பட்டுள்ளது.  அங்கே சில நாட்கள் ஆகவே கீழே விழும் கனிகளை மட்டுமே எடுத்து கொள்கின்றனர். கூட்டில் காக்கை முட்டைகள் இட்டு அடை காத்து வருகிறது, இதனை ஹாரிஸ் மேலேயுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இருந்தான்.  

ஒரு நாள் காக்கை குஞ்சுகளின் ஓசை ஒலி கேட் கின்றது, ஹாரிஸ் சந்தோஷம் அடைகிறான், இவ்வாறு நாட்கள் பல நகர்கிறது, திடீரென ஒரு நாள் மழை பெய்கிறது. சட்டென்று ஹாரிஸ்க்கு ஞாபகம் வருகிறது. காக்கை குஞ்சுகள் என்ன ஆயிற்று என்று ஜன்னல் வழியே பார்க்கிறான், காக்கை கூட்டின் மேல் தாய் காகம் தன் இறக்கைகளால் குடைப் போல் விரித்து மழைநீர் படாத வாறு தன் குஞ்சுகளை காப்பாற்றி வந்தது, இதனை கவனித்த ஹாரிஸ் குடை கொண்டு போய் கொடுக்கலாமா, மழை யே நின்றுவிடு, நின்று விடு என வேண்டிக் கொண்டான், மழையும் நின்று விட்டது. ஹாரிஸ் நிம்மதியாக இருந்தான்.  ஒரு சமயம் திடீரென பலமான காற்று வீசியது. காக்கை கூடு ஆட்டம் கண்டது, காற்று நின்று விட்டது. கொஞ்சம் சரிவு ஏற்பட்டு கூடு சாய்வு நிலையில் உள்ளது, யாரும் கவனிக்கவே இல்லை. மதியம் பகல் நேரம் என்பதால் அருகில் யாருமில்லை, காக்கைகள் கா கா கா கத்துக்கின்றன, மேலும் கூடு சரிகின்றது. காக்கைகள் கூட்டமாய் கா கா கா வென்று கரவொலி எழுப்புகின்றன. பாவம் அந்த குஞ்சுகள் மடிந்தே விட்டன. காக்கைகள் தவிர யாரும் கண்டு கொள்ள வில்லை, பாவம் குஞ்சுகள் இளம் பஞ்சு போல் மூக்கு தலை றெக்கை கால் என சிமெண்ட் தரையில் படிந்து இறந்து இருந்தது. அப்பொழுது தான் ஹாரிஸ் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டு இருந்தான்.  ஹாரிஸ் வந்தபோது அந்த காட்சியைப்பார்த்து அதிர்ச்சியுற்று மனதளவில் வருந்தினான். கண்களில் கண்ணீர் தழும்பியது. காக்கைகள் மேலும் மேலும் கத்திக் கொண்டு இருந்தன. ஹாரிஸ் அங்கேயே உட்கார்ந்து வருந்திய பிறகு வீட்டுக்கு சென்றான்.

 அன்று இரவு முழுவதும் அவனது மனதை வாட்டிக் கொண்டு இருந்தது, சரி வர சாப்பிடாமல் இருந்தான், ஏதோ ஒன்று இழந்தாற்போல் இருந்தான். இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆயிற்று, அவன் மரத்தின் கீழ் வந்து காக்கை கூடு இருக்கும் இடத்தை கூர்ந்து கவனித்தான், தாய் காகம் மரக் கிளையில் உட்கார்ந்து ஹாரிஸை வேதனையாகப் பார்த்து கொண்டு இருந்தது.  இவ்வாறு சில நாட்கள் நகர்ந்து செல்ல ஹாரிஸ் போய் வரும் போதுதெல்லாம் காகங்கள் இரண்டும் கா கா கா என்று குரல் கொடுத்து கொண்டு இருந்தது, இதனை கவனித்த ஹாரிஸ்க்கு காக்கை களுக்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணம் எழுந்தது, இரவு நேரத்தில் சிந்தித்து ஒரு திட்டம், வரையறு செய்யலாம் என தீர்மானித்தான்.  என்ன செய்வது என்று ஒரு வெள்ளைத் தாளில் குறித்து கொண்டான், முதலில் காகத்தின் நீளம் அகலம் உயரம் அளவீடுகள் வைத்து பென்சிலால் படம் வரைந்து கொண்டான், பிறகு தச்சனிடம் சென்றான்.  ஆசாரியிடம் விளக்கமாக எடுத்து சொன்னான். காக்கைக்கு கூடு தாயர் செய்யும் நோக்கம் நல்ல செயல் என்றார் தச்சன், உடனே ஹாரிஸ், நான் சேமித்த பணத்திலிருந்து செலவு செய்கிறேன் என்றான், தச்சனும் நானும் இரண்டு பங்கு குறைத்துக் கொள்கிறேன், ஒரு பங்கு போதும் என்கிறார்.  ஹாரிஸ் குறிப்பிட்ட வரைபடம் போல் காக்கைக் கூடு தயாராகிக் கொண்டு இருக்கிறது, கீழே கிண்ணம் போன்று அமைப்பு, விளிம்பில் தூண்கள் காக்கை உள்ளே சென்று வர, கூட்டின் மேல் பகுதிக்கு கூம்பு போன்று கூரை மழையில் நனையாத வாறு அமைப்பு, ஹாரிஸ் க்கு மகிழ்ச்சியாக இருந்தது.  செயற்கை காக்கைக் கூட்டை முன்பு இருந்த இடத்தில் பொருத்தினான், கூட்டில் அடிப் பாகத்தில் பஞ்சுகள் வைத்து இருந்தான். காக்கைகள் வாரம், நாட்கள், நோட்டம் செய்தன. பிறகு மெல்ல மெல்ல அக் கூட்டில் சிறு சிறு குச்சிகள் வைத்து வர தொடங்கின.  பிறகு கூட்டை அங்கிருந்து அகற்றி கட்டிடத்தின் ஒரு லேப்ட் பகுதியில் வைத்து அசையா வண்ணம் பொருத்தினான், காக்கைகள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து குடியேறத் தொடங்கின.  பெரும் மகிழ்ச்சியில் ஹாரிஸ் தினமும் உணவு பொருட்கள் வைத்து வந்தான், காகங்கள் நன்றிக் கடனாக கா கா கா என கூவி நண்பர்களாக ஆகிவிட்டன.