tamilnadu

img

உயிரியல் பூங்காக்களில் குவியும் மக்கள் கூட்டம்!

உயிரியல் பூங்காக்களில் குவியும் மக்கள் கூட்டம்!

சென்னை, ஏப்.20- சென்னையில் அறிஞர் அண்ணா உயிரி யல் பூங்கா மற்றும் சிறுவர் பூங்காக்களில் கோடை விடுமுறை காரணமாக கூட்டம் அலை மோதுகிறது. வார இறுதி விடுமுறை மற்றும் கோடை விடு முறை காரணமாக மக்கள் அதிக அளவில் வரு கின்றனர். குறிப்பாக, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி பாம்பு பண்ணை ஆகிய இடங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த வார இறுதியில் சராசரியாக 6,000 பார்வையாளர்கள் வந்தனர். பூங்காவை சுற்றி பார்க்க ஏற்பாடுகள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அதிகரித்துள்ளது என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெப்பத்தை குறைக்கும் நடவடிக்கையாக பூங்கா நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது. பார்வையாளர்கள் சிரமமின்றி பூங்காவை சுற்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காவின் பாதைகளில் எட்டு இடங்களில் தண்ணீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெப்பம் தெரியாமல் சுற்றிப் பார்க்க முடியும். மேலும், விலங்குகளின் கூண்டுகளில் வெப்பம் தாக்காதவாறு சாக்குப்பைகள் கட்டப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதே போன்ற ஏற்பாடு சிறுவர் பூங்காவிலும் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மான், குரங்கு மற்றும் பறவைகளின் கூண்டுகளிலும் ஈரமான சாக்குப்பைகள் கட்டப்பட்டுள்ளன. “புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்கா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. இது முதல் கோடை காலம். அதனால் இன்னும் அதிகமான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கி றோம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார். கோடை விடுமுறை முடியும் வரை கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.