திருவள்ளூர், டிச.9 - திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் மழையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்குட் பட்ட, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், எல்லாபுரம் ஆகிய ஒன்றியங்களில் மழையின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. புயல் காற்றும் பலமாக வீசியதால் அடுத்த ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீர் நீரில் மூழ்கியது. இந்த பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக பலத்த சூறைக் காற்றாலும் இடைவிடாது பெய்து கனமழையாலும் ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் கிராமங்களுக்குள் விவசாய நிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள நீர் புகுந்ததால் விவசாயிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகினர். மேலும் இப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகின. நூற்றுக்கணக்கான மாடுகள் நோய்வாய்பட்டு கோமாரி நோய்க்கு ஆளாகியுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் பி.கதிர்வேல், மாவட்ட துணைத் தலைவரும் ஞாயிறு ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.வி.எல்லையன், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர்கள் நாசமடைந்துள்ளது. கடந்த 6 நாட்களாக மழைநீர் சூழ்ந் துள்ளதால் நெற் பயிர்கள் அழிந்து வருகிறது. இதனால் விவசாயி மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ள னர். இந்நிலையில் குறைந்த பட்சம் தமிழ்நாடு அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கள் வலியுறுத்தினர்.