விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் பார்த்து கடன் வழங்கும் உத்தரவை திரும்பப்பெறுக கடலூர் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை
கடலூர், ஜூன் 11 - கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் பார்த்து தான் வழங்க வேண்டும் என்ற புதிய உத்தரவை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளர் க.நந்தக்குமார் மே 26 அன்று அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பிய வழிகாட்டு நெறிமுறைகளில், “இனிமேல் விவசாயிகளுக்கு எந்த வகையான கடன் வழங்க வேண்டு மென்றாலும் சிபில் ரிப்போர்ட் அடிப்படை யில் மட்டுமே கடன் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். வேளாண் உற்பத்தி செலவு களும் மூலதன செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பயிர்க்கடன் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கு தேவை யான முழு கடனையும் கூட்டுறவு வங்கிகள் வழங்காத நிலையில், விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் நிலை உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற வரும் விவசாயிகளுக்கு இது போன்ற நிபந்தனைகளை விதித்திருப்பது, இனிமேல் எந்த விவசாயியும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையை ஏற்படுத்தும். இதனால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் சூழல் உருவாகும். எனவே, மாநில முதலமைச்சர் தலை யிட்டு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு சிபில் ரிப்போர்ட் கேட்கும் உத்தரவை ரத்து செய்திட வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்பு மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட இரு கடன்களைப் பெறும் விவசாயிகளுக்கு ₹3 லட்சத்திற்குள் தான் கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.