tamilnadu

மிக்ஜம் புயலால் பெரும் பாதிப்பு

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்துவதோடு, ஆளுநர் மூலம் உறுப்பினர்களை நியமிக்கும் ஜனநாயக விரோத சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஜம்மு - காஷ்மீரில் தொகுதி  மறுவரையறை முடிந்து, இறுதி  வாக்காளர் பட்டியல்கள் வெளி யிடப்பட்ட பின்னர், மாநிலத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை மீண்  டும் கொண்டுவருவதற்கு- 2018ஆம்  ஆண்டே நடத்தப்பட வேண்டிய- சட்டமன்றத் தேர்தல்களை உட னடியாக நடத்திட வேண்டும் என்று  அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

மாறாக, மக்களவை சமீ பத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள காஷ்மீர் மறுசீர மைப்புச் சட்டத்தைத் (Kashmir Reorganization Act) திருத்தி இரு  சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி  இருக்கிறது. இச்சட்டம் தொடர்பாக டிசம்பர் 11 அன்று உச்சநீதிமன் றம் தன்னுடைய தீர்ப்பை வழங்க  இருக்கிறது. அந்தத் தீர்ப்பு வரை  காத்திருப்பதற்குப் பதிலாக, அவ சர கதியில், ஜனநாயகத்தையும், நீதித்துறை நடவடிக்கைகளையும் மீறி இந்தச் சட்டம் திருத்தப்பட்டி ருக்கிறது. மேலும், இப்போது கொண்டு  வரப்பட்டுள்ள திருத்தங்களின்படி, மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்படும் சட்டமன்றத்திற்கு துணைநிலை ஆளுநர் நியமன உறுப்பினர்களை அளித்திடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மிக வும் ஜனநாயக விரோதமானது.  இத்தகைய நியமன உறுப்பினர்  களை மக்களால் தேர்ந்தெடுக்கப்  படும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம்தான் நிய மனம் செய்யவேண்டுமே தவிர, அவர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதி களால் நியமிக்கப்படக் கூடாது.

குற்றவியல் சட்ட மசோதாக்களை கூட்டுக்குழுவுக்கு அனுப்புக!
நாட்டில் தற்போது நடைமுறை யில் இருந்துவரும் இந்தியத் தண்ட னைச் சட்டம் (Indian Penal Code),  குற்றவிசாரணை நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code), மற்றும் இந்திய சாட்சியச்  சட்டம் (Indian Evidence Act)  ஆகியவற்றை மாற்றியமைத்தி டும் விதத்தில் மூன்று சட்டமுன் வடிவுகளை ஒன்றிய பாஜக அரசு  கொண்டு வந்திருக்கிறது. அவற்றை நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றவும் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரைவு சட்டமுன்வடிவுகளில் பிழைகள் ஏராளமாக மலிந்து கிடக்கின்றன. அவை ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள் மற்றும் குற்றவியல் நடைமுறை அமைப்பு முதலியவற்றில் ஆழ மானவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகள் ஆகும்.

எனவே, இந்தச் சட்டமுன்வடிவு கள், மக்களவை மற்றும் மாநிலங்க ளவையின் கூட்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு முழுமையான பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக் கப்பட வேண்டும். அதன்பின்னர் மட்டுமே அவை நிறைவேற்றப்பட வேண்டும்.

இஸ்ரேல் - காசா போரை நிறுத்த வலியுறுத்துக!
இஸ்ரேல் ராணுவம், பாலஸ் தீனத்தின் காசா பகுதியிலும், மேற்குக் கரை பகுதியிலும் மேற் கொண்ட இனப்படுகொலைத் தாக்  குதல்களில் இதுவரை 17 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர் கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 70 விழுக்காட்டினர்  பெண்கள் மற்றும் குழந்தைகளா வர். பாலஸ்தீனர்களை இவ்வாறு பூண்டோடு ஒழித்துக்கட்டும் விதத்  தில் நடைபெற்றுவரும் தாக்கு தல்களுக்கு உடனடியாக முற் றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், அங்கே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உலகம் முழுதுமிருந்து விரிவான அள வில் குரல் எழுப்பப்பட்டது.

போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைத்து இஸ்ரேலியப் பயணக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும்  ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில்  தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை டிசம்பர் 8 அன்று அமெரிக்கா தனக்  குள்ள ‘வீட்டோ’ அதிகாரத்தைப்  பயன்படுத்தி நிராகரித்திருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கடும்  கண்டனம் தெரிவித்துக் கொள்கி றது.

போர் நிறுத்தம் உடனடியாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று மோடி அரசாங்கம் கோர வேண்டும் என்று அரசியல் தலை மைக்குழு வலுவாக வலியுறுத்து கிறது.