tamilnadu

100% அஞ்சல் வாக்குப் பதிவு-வேட்பாளர் செலவு விவகாரம்

சென்னை, ஏப். 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், வி. ராஜசேகர் ஆகியோர் செவ் வாய்க்கிழமை (ஏப்.16) சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இரண்டு கடிதங்களை அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் பணி களுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள், அலுவலர்கள் அனை வரும் 100 விழுக்காடு அஞ்சல் வாக்கு கள் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் செலவுக் கணக்கு களில் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கடி தங்களில் அவர்கள் முறையிட்டனர்.பின் னர் செய்தியாளர்களையும் சந்தித்த அவர்கள் அப்போது கூறிய தாவது:- 

அஞ்சல் வாக்குகளை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரைக்கும் சமர்ப்பிக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ஒவ் வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய தலைமை தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை கணக்கில் கொண்டு, ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிக்க வேண்டும் என்று அரசாணைகள் மூலம் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, அஞ்சல் வாக்குகள் தமிழ்நாட்டில் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், இந்த கால அவகாசம் போதாது. காரணம், பலரும் தேர்தல் மற்றும் அவர் அவர் பணியில் இருக்கின்றனர். மேலும், சட்டப்பூர்வ மாக சலுகை இருக்கும்போது, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி, 90 விழுக்காடு அரசு  ஊழியர்கள் நாங்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு பிரச்சனை இருக்கலாம். இதற்காக மாற்ற முடியாது என்று கூறினார்.

ஒரு நாள் அவகாசம் 
பிரச்சனை எழுந்திருக்கும் பகுதிகள் குறித்து விளக்கமாக தேர்தல் அதி காரியிடம் எடுத்துக் கூறினோம். பின்னர், கூடுதலாக ஒரு நாள் (ஏப்.17 வரை)  அஞ்சல் வாக்குகளை வழங்க வேண்டும்; ஏப்ரல் 18 வரை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களது கோரிக்கை யை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

அஞ்சல் வாக்களிப்பதில் தேர்தல் தேதி அறிவித்ததும் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். கடைசி நேரத்தில் இதுபோன்ற குழப்பங்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும். காரணம், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போது மிகப்பெரிய அள வில் சட்டப் பிரச்சனைகள் எழுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினோம்.

அந்த வகையில், அஞ்சல் வாக்கு களை செலுத்துவதற்கான கால அவ காசத்தை ஏப்ரல் 18 வரை நீட்டிக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தேர்தல்  அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

செலவு கணக்கு விவகாரம்
அடுத்து மிக முக்கியப் பிரச்சனை, தலைமை தேர்தல் அதிகாரி மார்ச் 23 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அன்றைக்கு, இந்த தேர்த லில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யக்கூடிய செலவு சம்பந்தமான உச்ச வரம்பு ஒரு மக்களவைத் தொகு திக்கு 95 லட்சம் ரூபாய் என்று கூறி னார். ஒரு வேட்பாளர் தங்களின் செலவுக் கணக்கை மூன்று நாட்களுக்கு ஒரு  முறை சமர்ப்பிக்க வேண்டும் என்றார். 

அப்போது, இந்த செலவுக் கணக்கு  தொடர்பாக தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ள விலைப்பட்டியல் தன்னிச்சையானது என்றும் அது ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்தோம்.  ஆனால் இன்றும் பல தொகுதிகளில்  இந்த விலைப் பட்டியல் தான் கடைப் பிடிக்கப்படுகிறது. ஒரு சேருக்கு 36  ரூபாய் என்றும் ஒரு டியூப் லைட்டுக்கு 63 ரூபாய் என்றும் தேர்தல் ஆணை யம் விலை நிர்ணயம்செய்துள்ளது.

இவை அனைத்தும் விஞ்ஞானப்பூர்வ மற்ற பார்வை. கூட்டங்கள் நடத்தும் குளிர் சாதனம் வசதி செய்யப்பட்ட திருமண மண்ட பத்தின் ஒரு நாள் வாடகை 1 லட்சம் ரூபாய், அரை நாள் வாடகையாக 50  ஆயிரம் ரூபாய், இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என்றால் அதற்கு தகுந்தாற்போல் மண்டப உரிமையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் கூட வாடகை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், திருமண மண்டபங்களை 2 மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்தால் கூட ஒரு நாள் வாடகை தான் நாங்கள் செலவு கணக்கில் சேர்ப்போம் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர். அதேபோல் பேனர், கொடி கட்டி னால் கொடிக்கு 50 ரூபாய், கோலுக்கு  35 ரூபாய் என்று கணக்கு எழுதுகின்ற னர்.

இப்படியாக செலவு கணக்கை எழு தினால் 95 லட்சம் என்ற எல்லையை  மீறி விட்டார் என்று கணக்கு காட்டுவார் கள். எனவே தன்னிச்சையாக இந்த விலையை நிர்ணயம் செய்தது சரியானது இல்லை என்று தெரிவித்து உள்ளோம்.  அதேபோல், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர், பொது அறிவிப்பு விளம்பரத்தை தினமணி, தீக்கதிர் ஆகிய இரண்டு நாளேடுகளுக்கு இரண்டு கட்டமாக கொடுத்திருந்தார். அதில் தினமணி விளம்பரத்திற்காக ரூ.68,276 என்றும் தீக்கதிருக்கு ரூ.2,46,846 என்றும் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தின மணி நிர்வாகத்தின் பில் தொகை 23,184  மட்டுமே. தேர்தல் அதிகாரி 45,092 ரூபாய் கூடுதலாக கணக்கு காட்டி யிருக்கிறார். தீக்கதிர் நிர்வாகத்தின் பில் தொகை ரூ.30 ஆயிரம் மட்டும் தான். ஆனால், 2,16,848 ரூபாய் நிழல் பதிவேடு செலவினமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.  அதற்கு, உங்கள் செலவு விவ ரங்கள் குறித்து அந்தந்தத் தொகுதி அதிகாரிகளிடம் முறையாக ஒரு கடிதம் கொடுங்கள் பரிசீலிப்பார்கள். அப்படி பரிசீலிக்கவில்லை என்றால்  நான் தலையிடுகிறேன் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். இவ்வாறு ஆறுமுக நயினார்,  வி.ராஜசேகர் ஆகியோர் தெரிவித்த னர்.