சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடிய சிபிஎம் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் என்ற முழக்கத்துடன் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தற்போது மிகவும் பின்தங்கி யுள்ளது.
முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் பிஆர்எஸ் கட்சி யின் பிரச்சாரம் நடைபெறுகிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் தெலுங்கானா வில் பிஆர்எஸ் சந்தித்த மிகப் பெரிய பின்னடைவு, முறைகேடு களால் அரசுப்பணிக்கு ஆட்சேர்ப்பு தேர்வுகள் 29 முறை ஒத்திவைக்கப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் பிரச் சாரத்துக்கு பிசிசி தலைவர் ரேவந்த ரெட்டி தலைமை தாங்குகிறார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் தம்மனேனி வீரபத்ரம் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 19 பேர் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் பிரபல மான இடதுசாரி அரசியல் கலாச் சாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற அழைப்புடன் வாக்காளர் களை அணுகி வருகின்றனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், பி.வி. ராகவலு, சுபாஷினி அலி, ஏ. விஜயராகவன் ஆகியோர் பேர ணிகள் மற்றும் வாகன பிரச்சா ரங்களில் பங்கேற்கின்றனர்.
119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டமன்றத்திற்கு வரும் 30 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3 அன்று முடிவுகள் தெரியவரும்.