tamilnadu

img

ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வை கைவிடுக - சிபிஎம்

ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வை  தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தற்போது தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் தலையில் பல மடங்கு சுமையை ஏற்றுவதுபோல் ஆண்டிற்கு ஆறு சதவிகிதம் வரி உயர்த்தப்படும் என்பது இன்னும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த வரி உயர்வினை மறு பரிசீலனை செய்வதோடு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பதை முற்றிலுமாக கைவிட வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.