சென்னை, ஜன. 6 - போக்குவரத்துத் தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜனவரி 5 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. 90 மாதங்களாக பஞ்சப்படி உயர்வில்லை ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை யைத் துவக்குவது, ஓய்வுபெற்றோ ருக்கு 90 மாதங்களாக வழங்காத பஞ்சப்படி உயர்வை வழங்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள் ளிட்ட கோரிக்கைகள் பிரதான கோரிக் கைகளாக உள்ளன.
இப்பிரச்சனை யில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்க ளுடன் 05.01.2024 அன்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் 07.01.2024 அன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில் போக்கு வரத்துத் தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர், முதல்வரிடம் கலந்தாலோசித்து வரு வதாக கூறியிருப்பது நம்பிக்கை அளிப் பதாக உள்ளது.
தொழிலாளர்களை வஞ்சித்த அதிமுக அரசு தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி யில் இருந்த அதிமுக, போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளையும் ஏற்காமல் வஞ சித்தது. கடந்த 2015 முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களின் பஞ்சப்படி உயர்வு தொகையை வழங்காமல் பாக்கி வைத்து இத்தொழிலாளர்களை பழி வாங்கியது. இந்நிலையில், நீடித்து வந்த ஊதிய உயர்வு பிரச்சனையை 2021-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதேபோல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒருபகுதி பணப் பயன்களை அளித்தது பாராட்டுக்குரியதாகும். எனினும், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பஞ்சப்படி உயர்வு தொகை கிடைக்கா மல் அன்றாட வாழ்வுக்கே அவதிப்பட்டு வருகின்றனர். இவைகளை கணக்கில் கொண்டு தமிழக அரசு தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட் டுள்ளது.