உளுந்தூர்பேட்டை. செப். 10- உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலை யத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. சேந்தநாடு கடைவீதியில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் ஜெ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் வர வேற்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.எம்.ஜெய்சங்கர், டி.எஸ்.மோகன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ஆறுமுகம், ஏ.எஸ்.குமார், ஜி.தாமோதரன், ஏ.குடியரசு மணி, என்.கே.வெங்கடேசன், ஏ.தெய்வானை, டி.முருகன், ஏ.செந்தில், எம்.வெங்கடேசன், வி. கஸ்தூரி ஆகியோர் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தனர். சேந்தநாடு பகுதியிலுள்ள ஊராட்சிகள் உள்ளிட்ட திருநாவலூர் ஒன்றியம் முழுவதை யும் புதிதாக அமையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைத்திட வேண்டும், நல்லாளக்குப்பம் டாஸ்மாக் கடையின் மூலம் இதுவரை 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள தால் உடனடியாக கடையை மூட வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை அமலாக்கி சட்டக்கூலி வழங்க வேண்டும், திருநாவலூர் ஒன்றியத்தில் முந்திரி, சவுக்கு, மரவள்ளி, மக்காச் சோளம் போன்ற வேளாண் பொருட்களை பயன்படுத்தி வேளாண் தொழிற் சாலைகளை உருவாக்க வேண்டும், அனைத்து ஊராட்சி மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு ஊழியர்கள் போன்றோருக்கு அரசு ஆணையின்படி மாத ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொதுமக்கள் உள்ளிட்ட ஏராள மானோர் மாநாட்டில் பங்கேற்றனர்.