சென்னை,ஆக.30- அமைச்சர் ஜெயக் குமார் தொகுதியில் பழு தடைந்த சாலை, மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் மண்டலம்-5 அலுவ லகத்தை முற்றுகையிட்டு வெள்ளியன்று (ஆக30) அலு வலரிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக் குட்பட்ட 53வது வட்டத்தில் உள்ள ராமதாஸ்நகர், காட் பாடா தெரு, லேபர்தெரு, ஸ்டாலின் நகர் , மூலக்கொத் தளம், பென்சினர்ஸ் லைன், பென்சில்பேக்டரி, எச்1 காவல்நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பல சாலை கள் முறையான பராம ரிப்பின்றி பழுதடைந் துள்ளது. குண்டும், குழியு மான தெருக்களில் பயணிக் கும் பொதுமக்கள் , மாண வர்கள், முதியவர்கள் பெருந் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மழை நீர் கால்வாய் முற்றிலும் சிதி லமடைந்து சாக்கடையாக மாறிவிட்டது. இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தார்ச் சாலை அமைக்கவும், உடைந்துபோன கால்வாய் களை புணரமைக்கவும் வேண்டுமென இந்த போராட் டத்தை மேற்கொண்டோம் என சிபிஎம் பகுதிச்செய லாளர் கே.செல்வானந்தம் கூறினார். பின்னர் காவல்துறை யினர் போராட்டத்திற்கு அனு மதி மறுக்கவே மண்டலம்-5ன் அலுவலரிடம் மனுவை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக் கைகள் படிப்படியாக சரி செய்துதரப்படும் என உத்திர வாதம் அளித்தார். இதில் சிபிஎம் வடசென்னை மாவட் டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிக் குழு உறுப்பினர்கள் டி. வெங்கட், பி.ஜெயவேல், சி. குட்டி, எஸ்.பவானி, ஜே. பிரமா, ஏ.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.