பெரம்பூரில் சிபிஎம் இருசக்கர வாகன பேரணி
மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தொடங்கி வைத்தார். இதில் திமுக பகுதிச் செயலாளர் அ.முருகன், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொளத்தூரில் கலாநிதி வீராசாமி பிரச்சாரம்
வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள், பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக பகுதிச் செயலாளர்கள் ஏ.நாகராஜன், வ.முரளிதரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆவடியில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரச்சாரம்
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடியில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடங்கி வைத்தார். இதில் தொகுதி பொறுப்பாளர் ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர். ஆ.கிருஷ்ணசாமி. காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் யுவராஜ். ஆவடி மாநகராட்சியின் முன்னாள் தலைவர் விக்டரி மோகன், மேயர் உதயகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், பகுதிச் செயலாளர் அ.ஜான், சிபிஐ பகுதிச்செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அயனாவரத்தில் இந்தியா கூட்டணி பிரச்சாரம்
மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு அயனாவரத்தில் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் அயன்புரம் கே.சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஏ.கோபண்ணா பேசினார். சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, மாவட்ட குழு உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி எம்.சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் உள்ளனர்.