சிபிஎம் கிளர்ச்சி பிரச்சார இயக்கம்
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளர்ச்சி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக வியாழனன்று (ஜூன் 12) தி.நகர் பகுதி ராஜபிள்ளைத்தோட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தை மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் துவக்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தொடங்கி வைத்தார். பகுதிக்குழு உறுப்பினர் ந.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, செந்தில்குமார் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பத்தில்மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பங்கேற்றார். நெல்லிக்குப்பம் பெட்ரோல் நிலையத்தில் துவங்கிய பிரச்சாரப் பயணம் அண்ணா சிலை அருகே நிறைவு பெற்றது. பகுதிக்குழு செயலாளர் ஸ்டீபன் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டச் செயற்கு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜெயபாண்டியன், மூத்த தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற கிளர்ச்சி பிரசார இயக்கத்திற்கு மாநகர குழு உறுப்பினர் கௌரி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாநகர செயலாளர் எம்.பிரகலாதன், மாநகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கோரி பகுதி குழு உறுப்பினர் ஆர்.காளமேகம் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், டி.மதன், ஏ.பத்மா, லிக்காய் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், மூத்த தோழர் கே.செல்வராஜ் ஆகியோர் பேசினர்.