tamilnadu

பெரியார் கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் கலந்தாய்வு

பெரியார் கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் கலந்தாய்வு

கடலூர், மே 31- கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 2025 ஜூன் 2 முதல் தொடங்க உள்ளது. ஜூன் 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கான விளையாட்டு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரரின் வாரிசுகள் தேசிய மாணவப் படையினர் மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.  இதனைத் தொடர்ந்து முதல் கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு வருகின்ற 2025, ஜூன் 4  முதல் 10 வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகள் தவிர பிற துறைகளுக்கும்,  ஜூன் 11  முதல் 13 வரை தமிழ் மற்றும் ஆங்கில துறைகளுக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் அனைவரும் தவறாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட மார்பளவு படம் ஆகியவற்றை அசல் மற்றும் மூன்று நகல்களை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களின் சேர்க்கை தமிழக அரசின் ஆணையின்படி கண்டிப்பாக மதிப்பெண் தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் ஒற்றைசாளர முறையில் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும்  உள்ள இடங்களின் அடிப்படையிலேயே மாண வர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  கலந்தாய்வுக்கு வருவதால் மட்டுமே மாணவர்களின் சேர்க்கை உறுதி அல்ல. விண்ணப்பித்த துறையில் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சியில் இடம் இருந்தால் மட்டுமே மாண வர்களுக்கு அந்தத் துறையின் பாடப் பிரிவில் அனுமதிஅளிக்கப்படும். இல்லை யென்றால் அவர்கள் தேர்வு செய்த பிற துறையில் சேர்ந்து கொள்ள அனு மதிக்கப்படுவார்கள். மதிப்பெண் தர வரிசையின் படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவ மாணவி யர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.