நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏரியின் மீது போடப்பட்டுள்ள சாலையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கப் பணியில் பழைய குழாய்களைப் பதித்து ஊழல் செய்ய முயன்ற ஆளுங்கட்சி ஒப்பந்ததாரரின் மோசடியை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கண்டு பிடித்து தரமற்ற பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருநாவ லூர் ஒன்றியத்தில் உள்ள களமரு தூரில் பாசன ஏரி உள்ளது. இந்த பாசன ஏரியின் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் பெற்று வந்தன.
இந்நிலையில் இதன் மீது அமைக்கப்பட்டிருந்த 700 மீட்டர் சாலையை விரிவாக்கம் செய்ய சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு தரப்பி னர் கோரிக்கை வைத்திருந்த நிலை யில், சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன. இதன் விரி வாக்கத்திற்காக ஏரியில் மண் அடித்து சுமார் 20 அடி அளவிற்கு உயரமாக்கும் பணி நடைபெற்று வந்தது. ஏரியின் நீர் எதிர்ப்புறம் உள்ள நிலங்களுக்கு போகும் வகையில் நான்கு இடங்களில் பாலம் கட்டும் பணிகளும் நடை பெற்றன. இப்படி கட்டப்பட வேண்டி இருந்த ஒரு பாலத்தில், வேறு இடத் தில் பயன்படுத்தப்பட்ட சேத மடைந்த குழாய்களை பதித்திருந்த னர். ஆனால் இதனை கண்டு பிடித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வியாழனன்று இரவு இதனை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதனை அறிந்த ஒப்பந்ததாரர் வியாழனன்று இரவோடு இரவாக பழைய குழாய்களை திருட்டுத்தன மாக அகற்றினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் டி.எஸ்.மோகனை தொலைபேசி யில் தொடர்பு கொண்ட நெடுஞ் சாலைத்துறை உதவி இயக்குனர் மணிமொழி "இதில் எந்த தவறும் நடைபெறவில்லை" என வெள்ளி யன்று காலை கூறியுள்ளார்.
இதன்பின் பகல் 11 மணியளவில் பாலம் கட்டும் ஏரிக்கரை பகுதியில் கூடிய தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.எஸ். மோகன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.ஆனந்தராஜ், கே.அய்ய னார், களமருதூர் கிளை செயலா ளர்கள் கே சக்திவேல், என்.செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் நெடுஞ் சாலைத்துறையின் மூலம் நடை பெறும் பணியில் நடைபெற்ற ஊழல் களை கண்டித்தும், சாலையை தர மாக அமைக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில் சம்பவ இடத் திற்கு வந்த உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மணிமொழி மற்றும் உதவிப் பொறியாளர் கவிதா ஆகி யோர் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் குழாய்களை அகற்றிவிட்டு ஏற்க னவே இருக்கும் சாலையில் உள்ள படி கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும், நான்கு பாலங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களில் மூன்று இடத்தில் வயல்வெளியி லிருந்து விளைச்சலை சாலைக்கு மேலே கொண்டு வருவதற்கு கரை களில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும், 700 மீட்டர் சாலையின் இரண்டு முனைகளிலும் இணைப் புச் சாலை அமைக்க வேண்டும், ஊழல் முறைகேடு இல்லாமல் இப் பணியை தரமாக செய்ய வேண் டும் என தலைவர்கள் அதிகாரிகளி டம் வலியுறுத்தினர். அதனடிப்படை யில் பணிகளை செய்து தருவதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென் றனர். இதற்கான ஒப்பந்தப் பணியை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் எடுத்துள்ள தாகவும், இவருடைய மைத்துனர் ஆளும் கட்சியான அதிமுகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் என்றும் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் டி.எஸ்.மோகன் தெரிவித்தார். போராட்டத்தில் ஆளுங்கட்சி பிர முகரான களமருதூரைச் சேர்ந்த ரா.ராதாகிருஷ்ணன் என்பவரும் ஊழலை கண்டித்து முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.
-வி.சாமிநாதன்