tamilnadu

img

மாநகராட்சி அதிகாரி ஆபாச பேச்சு லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, ஜூலை 18- மாநகராட்சி அதிகாரி ஒரு வர் ஓட்டுநர்களை ஆபாச மாக பேசியுள்ளார். இதனை  கண்டித்து ஓட்டுநர்கள் ஊழி யர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்திற்குட்பட்ட (வளசரவாக்கம்) 155வது  வட்ட துப்புரவு ஆய்வாளராக  சீனிவாசன் என்பவர் பணி யாற்றி வருகிறார். இவர் வளச ரவாக்கம் மண்டல குப்பை  லாரிகள் நிறுத்தி வைக்கும்  இடத்திற்கு 17ந் தேதி வந்  துள்ளார். அங்கு அமர்ந்தி ருத்த ஓட்டுநர்களை ஆபா சமான வார்த்தைகளால் திட்டி யதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி  அன்றைய தினமே மண்டல அதிகாரியிடம் புகார் அளித் துள்ளனர். அதன்மீது எந்த  நடவடிக்கையும் எடுக்காத தால் சனிக்கிழமையன்று (ஜூலை 18) ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். இதனால் மண்டலம் முழு வதும் குப்பை அள்ளும் பணி  பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நண்பக லில் தலைமை பொறியாளர் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். துப்பு ரவு ஆய்வாளர் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்கப்ப டும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படும் என்று  உறுதி கூறினார். இதனை யடுத்து ஓட்டுநர்கள் லாரி களை இயக்கினர்.