tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா தொற்று...  ஒரே நாளில் 65 பேர் பலி...   

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவிய கொரோனா தற்போது மதுரை, தேனி, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய உள்மாவட்டங்களிலும் காலடி வைத்து தனது மிரட்டல் ஆட்டத்தை தொடங்கியது.    

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மாநிலம் முழுவதும் 65 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் செய்தியான குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2214 ஆக உயர்ந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 65,592 ஆக உள்ளது. 

தமிழகத்தின் கொரோனா மையமாக உள்ள சென்னையில் இன்று 1,842 பேர் புதிய நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 66,538 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  மதுரை (352), திருவள்ளூர் (251), செங்கல்பட்டு (215) ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 200-யை தாண்டியது. காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு 100-யை தாண்டியது.