tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று...

சென்னை 
கடந்த ஒருமாத காலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் கொரோனா மையமாக தமிழகம் மாறியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 38 பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 896 ஆக அதிகாரித்துள்ளது.   

;