tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா -பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு

தமிழகத்தில் தற்போது மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. 
தமிழகத்தின் பல பகுதிகளில்  நேற்றுவரை கொரோனா பாதிப்பில் 67 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை மேலும் 7பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது. தற்போது மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பெருந்தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் தெரிவித்துள்ளார். 
இதைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில்  57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் தமிழகத்தில் ஒரே நாளில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆகும் . இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தில்லி மாநாட்டில் பங்கேற்ற 1131 பேரில் 523பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.