tamilnadu

கொரோனா: நடிக்க வாய்ப்பில்லாததால் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை

சென்னை, ஜூன் 7- கொரோனா முடக்கத்தால் சின்னத்திரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளன. சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் சிறிய கதாபாத்திரங்களில் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானமே நடிகர்-நடிகை களையும் அவர்களது குடும்பத்தையும் பாது காத்து வந்தது. கிட்டத்தட்ட எழுபது நாட்களாக சென்னையில் சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் வீட்டில் முடங்கியிருந்த இருவரும்  தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். நிதி நெருக்கடியே இந்த துயர முடிவிற்கு காரணமென கூறப் படுகிறது.  சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர். அவரது சகோ தரி ஜெயகல்யாணி. இவர்கள் சின்னத்திரை யில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தனர். கொரோனாவால் வேலையில்லாததால் வாழ வழியின்றி தவித்த இவர்கள் இரு வரும் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட னர். இரு தினங்களாக இவர்களது வீடு திறக்கப்படவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் உயிரி ழந்தது தெரியவந்தது.