tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 6 பேருக்கு கொரோனா

சென்னை, மே 24 - சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 6  மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு  முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலை யில், செவ்வாயன்று (மே 24)  தொற்று 2000க்கும் கீழ் சரிந்துள்ளது.  அதன்படி, இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 21ஆம் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22ஆம் தேதி 2,226  ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை திங்களன்று 2,022ஆக  குறைந்த நிலையில், 3ஆவது நாளாக செவ்வாயன்று பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழ் சரிந்துள்ளது. கொரோனாவால், இதுவரை  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  4 கோடியே 31 லட்சத்து 40,068ஆக  உயர்ந்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490ஆக உயர்ந் தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை  பெற்று வந்த 1,635 பேர் குணமாகி யுள்ளனர். அதன்படி, இதுவரை குணம் அடைந்தவர்கள் எண் ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737ஆக உயர்ந்தது. தற்போது 14,841  பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில்,சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல் கலைக்கழக மாணவர்கள் விடுதி யில் 6 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. தொற் றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுளனர். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சென்னை ஐஐடியில் இதே  போல் அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியா னது, அதனைத் தொடர்ந்து மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனை வருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;