tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா....

சென்னை
நாட்டின் புதிய கொரோனா மையமாக முளைத்துள்ள தமிழகத்தில் பாதிப்பு தினமும் ராக்கெட் வேகத்தில் உயருகிறது. 

முக்கியமாக தலைநகர் மண்டலமான சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் விதம் சவாலாக உள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 203 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  மட்டும்  இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1082-யை தாண்டியுள்ளது.