tamilnadu

img

கொரோனாவுக்கு கூட்டுறவு சங்க ஊழியர் பலி

காஞ்சிபுரம், ஜூலை 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பின ரும், காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்க  ஊழியருமான தோழர் பக்தவச்சலம்,  கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவ ருக்கு வயது 55. கொரோனா தொற்று காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (ஜூலை 2) உயிரிழந்தார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். பட்டு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி  நிகழ்வில் கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் கே.ஜீவா, சிபிஎம் நகர  செயலாளர் சி.சங்கர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு, சிஐடியு  மாவட்ட பொருளாளர் ஆர். மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;