tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு...  ஒரே நாளில் 125 பேர் பலியான சோகம்...  

சென்னை 
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் தான் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகம் என்றால், பலி எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உள்ளது. இதனால் தமிழக மக்கள் கொரோனா பரவலால் கடும் பதற்றத்தில் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா பலி எண்ணிக்கையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 125 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிறு) 6,019 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது. 
இன்னும் 54,019 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் 32 பேர் மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது.   

;