விழுப்புரம், ஏப்.6- விக்கிர வாண்டி தொகுதி எம்எல்ஏவும், விழுப்புரம் திமுக தெற்கு மாவட் டச் செயலாளரு மான நா. புக ழேந்தி உடல் நலக் குறைவால் சனிக்கிழமை காலை 10.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு முதல் வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாகவே கல்லீரல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த புகழேந்தி, விக்கிரவாண்டியில் முதல் வர் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட் டத்தில் கலந்து கொள்வதற்காக வெள் ளிக்கிழமை (ஏப்.5) வந்து கொண்டி ருந்தார். அப்போது ரத்த அழுத்தம் குறைந்து மயக்கமடைந்த அவர், உட னடியாக அருகில் உள்ள முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்பட்டார். மருத்து வர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித் தும் பலனின்றி சனிக்கிழமை (ஏப்.6) உயி ரிழந்தார். அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ ருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி யும், செல்வகுமார் என்ற மகனும் செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ள னர்.
எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநி லச் செயலாளர் இரா. முத்தரசன், மதி முக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை, திருநாவுக்கரசர், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!
நா.புகழேந்தி எம்எல்ஏ மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நா. புகழேந்தி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவ ரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த நா. புகழேந்தி எளிமையானவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் இனிமையாக பழகக் கூடியவர். அவரது மறைவு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், திமுக தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.