சென்னை,பிப்.11- அரபு கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மீதான என்.ஐ.ஏ சோதனைக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐஎன்ஏ அதிகாரிகள் பிப்.10 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து சிலரை கைது செய்துள்ளதோடு பலரிடமும் விசாரணைக்கு வர வேண்டும் என அழைப்பாணை கொடுத்துள்ளனர். கைது செய்யப் பட்டவர்களில் இருவர் இஸ்லா மிய மார்க்க அறிஞர்கள் மற்றும் அரபு மொழி பண்டிதர்கள் ஆவர்.
இஸ்லாமிய மத போதனை, அரபு மொழியை மாணவர்க ளுக்கு கற்று தந்ததை தவிர வேறு எவ்வித குற்றமும் இவர்கள் செய்யவில்லை. ஒரு குற்ற சம்ப வத்தில் தொடர்புடைய நபர் ஒரு கல்வி நிலையத்தில் படித்தால் அந்த கல்வி நிலையத்தையே பயங்கரவாத நிறுவனமாக சித்த ரிப்பதும், ஆசிரியர்களையும், கல்வி நிறுவனத்தில் படித்த நூற்றுக் கணக்கான மாண வர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து விசாரணை நடத்து வதும், உண்மைக்கு மாறாக வழக்கில் சேர்ப்பதும் உலகில் எங்கும் நடக்காத மனித உரிமை மீறலாகும்.
இத்தகைய அராஜகத்தை தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து செய்து வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவை யற்ற பதற்றங்களை ஏற்படுத் துவதையும், சிறுபான்மை மக்க ளையும், மோடி அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்குவதையும் செயல்திட்டமாக வைத்திருக்கி றது தேசிய புலனாய்வு முகமை.
அதே போன்று தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வா கிகள் சிலர் வீடு, தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள் ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது. பாஜகவை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஆளுமை களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, என்ஐஏ போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு துறைகளை வைத்து விசாரணை என்ற பெய ரில் முடக்குவது நாட்டில் எதிர்க்கட்சி களே இல்லாமலாக்கும் பாசிச செயல் திட்டத்தின் ஒரு பகுதி என மக்கள் கருதுகின்றனர்.
ஒன்றிய புலனாய்வு அமைப்பு களை ஏவி எதிர்க்கட்சிகளை முடக்கும் சர்வாதிகார போக்கை பாஜக கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர் களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.