tamilnadu

img

சிபிஎம் மாநிலக்குழு அலுவலக முன்னாள் செயலாளர் தோழர் எஸ். ரமணி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் தோழர் ரமணி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் உள்ளிட்ட மாநிலக்குழு அலுவலக ஊழியர்களும், சமூக ஊடக குழுவினரும் கலந்து கொண்டனர்.

சென்னை, ஏப். 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு அலுவலக செய லாளராக பணியாற்றியவரும், மாநி லக்குழு முன்னாள் உறுப்பினருமான தோழர் எஸ். ரமணி காலமானார். அவருக்கு வயது 80.  தோழர் ரமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு அலுவலக செயலாளராகவும் பணியாற்றிய தோழர் எஸ். ரமணி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. தோழர் எஸ்.ரமணி சேலம்  உருக்காலையில் பணியாற்றும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு களை வகித்தவர். தமுஎகசவுடன் இணைந்து மாநிலத்தின் பல மாவட்டங்களுக்குச் சென்று நாடகக்குழு கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கட்சி யின் மாநிலக்குழு அலுவலக செயலாளரா கவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் அர்ப் பணிப்போடு செயல்பட்டவர்.

அவரது இணை யர் தோழர் சாவித்திரி அவர்கள் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநி லக்குழு அலுவலகத்தில் பணியாற்றியவர். தோழர் ரமணி அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடி யாத இழப்பு. அவரது மறைவால் துயரு ற்றுள்ள தோழர் சாவித்திரி மற்றும் அவரது மகள்களுக்கும், குடும்பத்தினருக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறது.