tamilnadu

img

‘கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாகங்களை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வோம்!’

தோழர் பி.ராமமூர்த்தி நினை வுச் சொற்பொழிவு நிகழ்வு க்கு தலைமை தாங்கிய  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், தோழர் பி.ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை, அரசியல், சமூக, தத்துவார்த்த பங்களிப்பை விவ ரித்தார். மேலும் அவர் பேசுகையில், “தோழர் பி.ராமமூர்த்தியின் நாடாளு மன்ற உரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும், சட்டமன்ற உரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

“ஒவ்வொரு ஆண்டும் பி.ஆர்.நினைவு சொற்பொழிவு நடைபெறும். வாழ்நாள் முழுவதும் தியாகம் புரிந்த மறைந்த கட்சித் தலைவர்களின் நினை வு நாளில், அவர்களது தியாகங்களை இளந்தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இதுபோன்ற நிகழ்வு கள் நடத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

தோழர் பி.ராமமூர்த்தியின் மகள் வழக்கறிஞர் ஆர்.வைகை வரவேற்று பேசியதன் சுருக்கம் வருமாறு:

தொழிலாளர்கள், விவசாயிகள் நலன் காக்கும் பல சட்டங்கள் தோழர் பி.ஆர்.முயற்சியால் இயற்றப்பட்டன. அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது. 75வது சுதந்திர தின உரையின்போது அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தோழர் பி.ராம மூர்த்தியின் நாடாளுமன்ற விவாதத்தை நினைவு கூர்ந்தார். பி.ஆர். முயற்சியால் நிறுவப்பட்ட பொதுத்துறைகள் ஏராளம்.

1974ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற மதக்கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பி.ஆர், “டாடா நிறுவனத்தின் மைதானத்தில் எப்படி ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்தப் பட்டது” என்று கேள்வி எழுப்பி “இத்த கைய கார்ப்பரேட் மதவாத கூட்டத்தி னால் நாட்டின் சமூக பொருளாதார ஜனநாயக அமைப்பு சீர்குலைக் கப்படும். இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை இன்றைக்கும் தீவிரப்படுத்த வேண்டி உள்ளது.

‘விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டு கள் பங்கு’ எனும் நூலில் “எங்கள் கால்கள் உழைக்கும் மக்களின் மத்தியில் உறுதியாக பதிந்துள்ளன. எங்கள் மேல் எந்த தீவிரமான தாக்குதல் நடத்தினாலும், நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து வளர்வோம் என்ற நம்பிக்கை எங்க ளுக்கு உள்ளது” என்று பி.ஆர் குறிப் பிட்டுள்ளார். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். மத வாதத்தை, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தகர்த்து நாட்டைப் பாதுகாக்க, மக்களைக் காக்க உறுதி யோடு செயல்படுவோம்.