ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் படத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும், காஷ்மீர் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி, “பாலஸ்தீனம், காஷ்மீரில் நடப்பது என்ன?” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.