இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுவண்ணாரப்பேட்டை கிளை சார்பாக தோழர் சந்திரன் நினைவு இரவு பாடசாலை மற்றும் நூலகம் திறக்கப்பட்டது. அவரது துணைவியார் சி ராஜலட்சுமி சந்திரன் நூலகத்தை திறந்து வைத்தார். சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் எம் வி.கிருஷ்ணன் ஆர்கே நகர் பகுதி செயலாளர் தீபா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் தமிழன், தலைவர் கார்த்தி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இசக்கி, விஜி, இ.கே.தர்மன், சந்திரனின் மகன்கள் பழனி, சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.