சென்னை, ஆக.29- கிண்டி எஸ்டேட் பொதுத் தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு) ஸ்தாபக ரும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி யின் மூத்ததலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.தாமோதரன், துணை வியார் வி.பி.லீலா உடல் நலக்குறை வால் வியாழனன்று (ஆக.28) காலமானார். அவருக்கு வயது 76. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக சி.பி. தாமோதரன் இருந்தார். இவரோடு சேர்ந்து கட்சிப்பணிக்கு லீலாவும் உதவினார். மேலும், கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாக இருந்த வி.பி.சி, அ.சவுந்தரராசன் மற்றும் இயக்க தோழர்களுக்கு உணவும், உரைவிடமும் வழங்கியவர். இந்துஸ்தான் டெலிபிரிண்டர் ஆலை போராட்டத்தில் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு உதவியதில் முன்னின்றவர். சென்னை கொரட்டூர் வெங்கட்ராமன்நகரில் உள்ள அவரது வீட்டில் லீலாவின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டி ருந்தது. அன்னாரது மறைவிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி , சிஐடியு வடசென்னை, தென்சென்னை மாவட்டக்குழுக்கள் ஆழ்ந்த அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து ள்ளது. கொரட்டூர் மயானத்தில் வியாழனன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.