tamilnadu

விழுப்புரம் வாக்குப்பெட்டி வைப்பறையில் 30 நிமிடம் செயலிழந்த கேமிராக்கள்!

விழுப்புரம், மே 3 - தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டி இயந்திரங்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’ என்று அழைக்கப்படும் வைப்பறை களில் வைக்கப்பட்டு இந்த அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளின் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் சுமார் 20 நிமிடம் வரை இயங்கவில்லை என புகார் எழுந்தது. 

தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இது ஏற்பட்டதாகவும் சில நிமிடங்களில் அது சரி செய்யப்பட்டது என்று தேர்தல் அதி காரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது.

இந்நிலையில்தான், தற்போது, விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் வாக்குப் பெட்டிகள் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள் ளன. இங்கு பொருத்தப்பட்டுள்ள கண்கா ணிப்பு கேமிராக்கள் வெள்ளிக்கிழமை (மே  3) காலை 9.28 மணி முதல் சுமார் 30  நிமிடங்கள் 9.56 வரைக்கும் இயங்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வேட்பாளர்களின் முக வர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் எம்.பி. புகார் செய்தார்.

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் பழனி, “யுபிஎஸ்-இல்  மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப் பட்டது” என்று கூறியுள்ளார்.

சிவப்பு மண்டலங்கள்
முன்னதாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகள், ‘சிவப்பு மண்டலமாக’ காவல்துறையால் வியாழனன்று அறிவிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. இதன்படி ஜூன் 4 வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி சாதனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்த ரவை மீறி யாரேனும் சிவப்பு மண்டல மாக அறிவிக்கப்பட்ட பகுதியில் டிரோன் கள் உள்ளிட்ட சாதனங்கள் பறக்க விட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.