tamilnadu

காலத்தை வென்றவர்கள்

தியாகிகள் சந்திரசேகர் ஆசாத் மற்றும் பகத் சிங் தலைமையிலான தேசிய புரட்சிகர இயக்கத்தில் இருந்து இந்திய சுதந்திரத் திற்காக போராடியவர் தோழர் சிவ வர்மா.  இவர் 1904 பிப்.9 அன்று உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பிறந்தவர். காந்தியடிக ளின் அழைப்பின்பேரில், தனது 17-வது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்.

1925 இல் கான்பூரில் படித்துக் கொண்டிருந்த சிவ வர்மாவும், ஜெய்தேவ் கபூரும் சந்திரசேகர் ஆசாத் மற்றும் பகத்சிங்கை சந்தித்தனர்.

இச்சந்திப்பு, 1927 இல் தில்லியில் ஒரு ரகசிய சந்திப்புக்கு வழி வகுத்தது. அங்கு, இந்துஸ்தான் குடியரசுக் கழகம், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சி (HSRA) என்ற புதிய பெயருடன், புதிய அமைப்பாக உரு வானது. இந்தியா முழுவதும் செயல்பட்ட இக்கட்சியின், ஐக்கிய மாகாணங்கள் பிரிவின் மத்தியக் குழு பிரதிநிதி யாக சிவ வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாகூர் சதி  வழக்கில் கைதான இவர், முதலில் ஆந்திராவின் ராஜ முந்தரி, அதன்பிறகு அந்தமான் சிறைகளில் அடைக்கப்பட்டார். அந்தமானில் சிறை சீர்திருத்தங்களுக்கான நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அங்கிருந்த கைதிகள் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர். இதில் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் இணைந்தனர். சிவ வர்மா அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

இந்த அமைப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பின்பற்றுவதாக அறிவித்தது. 1945 ஆம் ஆண்டுக்குள் ஏராளமான புரட்சிகர கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலும், சிவ வர்மா, ஜெய்தேவ் கபூர் உள்ளிட்ட சிலர், நாடு சுதந்திரம் அடை யும் வரை விடுதலை செய்யப்படவில்லை. பின்பு விடுதலையான சிவ வர்மா, வெகுஜன இயக்கங்க ளிலும், கட்சிப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1948 இல் ஐக்கிய கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலக் குழு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் மார்க்சிஸ்ட்களுக்கு எதிராக அரசாங்கம் தாக்குதல்  நடத்திய போது, சிவ வர்மா சிறையில் அடைக்கப் பட்டார். உட்கட்சிப் போராட்டத்தால் ஏற்பட்ட இன்னல் களை பொருட்படுத்தாமல், கட்சி, தொழிற்சங்க முன்னணி மற்றும் இலக்கிய வட்டங்கள் போன்ற வற்றில் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.  1964 நவம்பரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சிவ வர்மா, கட்சியின் உ.பி. மாநிலக் குழுவிற்கும் அதன் செயற்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு புரட்சிகர மார்க்சிஸ் ட்டாக, மார்க்சிச - லெனினிசக் கொள்கைகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். பகத் சிங்கின் கொள்கைகளுக்கு விசுவாசமான இவர், பகத் சிங்கின் எழுத்துக்களை தொகுத்துள்ளார்.

தனது முதுமைக் காலம் வரை ஓர் அர்ப்ப ணிப்புமிக்க புரட்சியாளராக திகழ்ந்த சிவ வர்மா, 1997 ஜனவரி 10 அன்று மறைந்தார்.