சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங் கள் மிக்ஜம் புயலால் பாதிக்கப் பட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். இந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் திரு நெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து மக்கள் வரலாறு காணாத இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ள னர். தூத்துக்குடி மாவட்டம் இன் னும் கூட இயல்பு நிலைக்கு திரும்ப வில்லை. ஒட்டுமொத்தத்தில் இவ் வியற்கை பேரிடர்களால் பொது மக்களின் வாழ்விடங்கள், குடி யிருப்புகள், கடைகள் மற்றும் வியா பார நிறுவனங்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள், விவசா யம், மீன்பிடித் தொழில், உப்ப ளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசமடைந்துள்ளன.
வீடுகளில் அளவுக்கதிகமான வெள்ள நீர் புகுந்து வீட்டு உபயோ கப் பொருட்களை நாசப்படுத்தியது டன், அவற்றை வெள்ளத்திலும் அடித்துச் சென்றுவிட்டன. ஏராள மான கால்நடைகள் உயிரிழந்துள் ளன. வெள்ளம் பாதித்த பகுதி களில் குவிந்துள்ள குப்பைகளை யும், சேறுகளையும் அப்புறப்படுத் துவது பெரும் பணியாக உள்ளது. தொற்றுநோய் பரவும் ஆபத்தும் ஏற் பட்டுள்ளது.
மக்கள் அனைத்தையும் இழந்து ஆதரவற்று தவித்துக் கொண்டி ருக்கும் நிலையில், தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிவாரண பணி கள் மற்றும் வழங்கி வரும் நிவா ரணத் தொகைகள் ஓரளவு ஆறு தலை தருகின்றன. ஆனால், இப் பேரிடரில் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற ஆதரவு கரம் நீட்ட ஒன் றிய அரசு இதுவரை முன்வர வில்லை. தமிழக முதல்வர், புயல் மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாயை நிதி யாக வழங்கிட வேண்டுமென்று பிர தமரை சந்தித்து நேரில் வற்புறுத்தி யபோதும், இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்பது ஒன்றிய அரசின் பழிவாங் கும் போக்கை காட்டுகிறது.
இவ்வாறு நிதியை வழங்க மறுக் கும் ஒன்றிய அரசு, மறுபக்கம் தமி ழக அரசையும், வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களையும் கொச் சைப்படுத்தும் வகையில் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரு கிறது.
எனவே, வரலாறு காணாத புயல், தொடர் மழை, வெள்ளப் பாதிப்பிற்கு பேரிடர் நிவாரண நிதி யாக தமிழக அரசு கேட்ட 21 ஆயி ரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வற்புறுத்தி 2024 ஜனவரி 3 அன்று சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ் திரி பவனை முற்றுகையிடும் போராட் டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.