சென்னை,பிப்.7- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ பிப்.6 முதல் ஆலோ சனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயல கத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
2-வது நாளாக துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
ஆலோசனையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி கள், காவல் ஆணையர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்துவதற்கான ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங் கள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவ டிகளில் கூடுதல் பாதுகாப்பு பலப் படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.