சென்னை, மே 7- 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்க ளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” என்ற நிகழ்வானது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மே 8ஆம் தேதி (புதன்) நடை பெறவுள்ளது.
இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனி யார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இத்திட்டத்தின் நோக்கம் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவி யர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயபடிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழி காட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும் என்று மாநில அரசு கூறியுள்ளது.