tamilnadu

பொன்னேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

திருவள்ளூர்,ஏப்.22- பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் 2019 - 20 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 22 முதல் வழங்கப்பட்டு வருகிறது.12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை யொட்டி அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பொன்னேரியில் உள்ள எல்.என்.ஜி அரசு கலைக்கல்லூரியில் திங்களன்று (ஏப்.22) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.சிறப்பு கலந்தாய்வு மே.15 விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், என்சிசி, என்எஸ்சி, மாணவர்கள் ஆகியோருக்கு மே மாதம் 15ஆம் தேதியன்று கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று மலைக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.விண்ணப்பம் வழங்கப்பட்ட முதல் நாளே பொன்னேரியை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.


இன்றைய நிகழ்ச்சி 


இன்றைய நிகழ்ச்சிநாஞ்சில் சம்பத், பா.பெருமாள். பொன். மாரியப்பன், ஏற்பாடு: சென்னை புத்தக சங்கமம்


;