tamilnadu

img

கல்விநிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சபீக் அமர்வு “கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்” என்று தெரிவித்தனர்.

மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடையை தடுப்பதில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் பெயரை தெரிவிக்க இணைதளம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்

மேலும், நன்கொடைகளுக்கு வருமான வரித்துறையின் வரி விதிப்பு சரி என தீர்ப்பளித்தனர்.