திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்கவும், முழுவதுமாக கட்டித்தரவும் ரூ.385 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
புதிதாக வீடுகளை கட்ட ரூ.4 லட்சமும், சேதமடைந்த வீடுகளை சீர்செய்ய ரூ.2 லட்சம் வரை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 4577 புதிய வீடுகள் கட்டப்படும். 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.