tamilnadu

மேகதாது அணை திட்ட அறிக்கையை நிராகரித்திடுக! பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை ,ஜூன் 24- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் திட்ட அறிக்கை யை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எழுதி யிருக்கும் கடிதத்தில், காவிரி யின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், காவிரியில் மேகதாது அணை கட்டும் முடிவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதி ரானது ஆகும்.  எனவே, கர்நாடக அரசு மேக தாது அணை கட்ட மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய  அரசு அனுமதி தரக் கூடாது என்றும், தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.