சென்னை, ஜூன் 15 - 2 மாதமாக ஊதியம் வழங்காததை கண் டித்து திங்களன்று (ஜூன் 15) சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழி லாளர்கள் போராட்டம் நடத்தினர். தாம்பரத்தை அருகே உள்ள சிட்லப் பாக்கம் பேரூராட்சியில் சுமார் 60 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கா ததை கண்டித்து ஜூன் 13ந் தேதியிலிருந்து போராடி வருகின்றனர். இதனையடுத்து உள்ளாட்சி ஊழியர் சங் கத்தின் (சிஐடியு) தென்சென்னை மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆதிகேசவலு, சத்தியநாராயணன் ஆகி யோர் தலையிட்டு நிர்வாக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜூன் 17ந் தேதிக்குள் சம்பளத்தை வழங்க ஒப்புக் கொண்டார்.