tamilnadu

img

துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரைவார்த்தால் வேலைநிறுத்தம் செங்கொடி சங்க பேரணியில் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 16- ராம்கி ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு அரசாணைப்படி மாத ஊதி யம் 16,725 ரூபாய் வழங்க வேண்டும், ராம்கி துப்புரவு தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில்  திங்களன்று (மார்ச் 16) கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. திருவல்லிக்கேணி காவல்  நிலையம் அருகில் ஆயிரக்க ணக்கான துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு ஆகியோர் தலை மையில் கோட்டை நோக்கி  பேரணி யாக சென்றனர். சேப்பக்கம் விருந்தி னர் மாளிகை அருகே பேரணியாக வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எஸ்.கே.மகேந்திரன் பேசியதாவது: லண்டனில் முதல் மாநகராட்சி உருவானது. அதற்கடுத்தபடியாக உருவான மாநகராட்சி சென்னை மாநகராட்சிதான். அப்படி பெருமை  வாய்ந்த மாநகராட்சியில் பணிபுரி யும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பு ரவு பணியாளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். துப்புரவு தொழிலா ளர்களுக்கு மாதம் 16,725 ரூபாய் வழங்க வேண்டும் என அரசு 2017ஆம் ஆண்டு ஆணை வெளியிட்டது.  மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும்  என்பதற்காக குப்பைகளை அப்புறப்  படுத்தும் இந்த தொழிலாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அரசு அறி வித்த ஊதியத்தை வழங்க மறுக்கி றது. அரசு அந்த ஆணையர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டாமா?. மானத்தோடு, கவுரவத்தோடு வாழ்வதற்காக சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் சென்னை மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் துப்பு ரவு தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.எனவே அறிவித்த அந்த ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் உள்ள  துப்புரவு பணி அல்லாத மற்ற பணி களை தனியாருக்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணி மேற்கொண்ட ராம்கி என்ற நிறு வனம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணம் முழுவதையும் அவர்களுக்கு கிடைப்பதற்கான நட வடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.  அந்த நிறுவனத்திற்கு புதிதாக எந்த ஒப்பந்தமும் வழங்கக் கூடாது. கிரேட்டர் சென்னையாக மாநக ராட்சி விரிவுபடுத்தப்பட்ட போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சி, நகராட்சி, உள்ளாட்சி களில் பணியாற்றிய என்.எம்.ஆர்.  தொழிலாளர்களை நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் நிரந்தரப்ப டுத்த வேண்டும். அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் துப்புரவு பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.   இதில் துணை பொதுச் செயலா ளர்கள் தேவராஜ், முனுசாமி, வி. ராஜன், துணைத் தலைவர் எம்.கிருஷணமூர்த்தி, துணைத் தலைவர் மணிமேகலை, பொருளாளர் ராஜேந்திரன், ராம்கி நிறுவன பொருப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.