tamilnadu

img

சிவில் சர்வீஸ் தேர்வு: தமிழகத்தில் கணேஷ்குமார் முதலிடம்

சென்னை:
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடிமை பணிகள் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் தமிழக அளவில் முதலிடம்  பிடித் துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைபணிக ளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.தொடர்ந்து 2020 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை ஆளுமை திறன் குறித்த நேர்முக தேர்வுகளும் நடத் தப்பட்டன. அவற்றின் அடிப் படையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.829 பேர் தேர்வு செய் யப்பட்டுள்ள நிலையில், பிரதீப் சிங் என்பவர் தேசியளவில் முதலிடத்தையும், ஜெட்டின் கிஷோர் மற்றும் பிரதீபா வர்மா ஆகியோர் 2 மற்றும் 3 இடங்களை பிடித் துள்ளனர்.கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர், தேசிய அளவில் 7வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித் துள்ளார்.

;