15 மண்டலங்களுக்கான நகர விற்பனைக்குழு தேர்தல்
ஜூன் 26ந் தேதி நடத்த சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை, மே 28 - 15 மண்டலங்களுக்கான நகர விற்பனைக்குழு தேர்தல் ஜூன் 26ந் தேதி நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் புதனன்று (மே 28) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 135 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, நகர விற்பனைக்குழுவிற்கு தேர்தல் நடத்து வது தொடர்பான தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. இதன்படி, மாநகராட்சியில் 561 சாலை கள், 35,730 தெருக்கள், 70 சந்தை பகுதி கள் உள்ளன. தற்போதுள்ள மாநகரம் முழுமைக்கும் உள்ள ஒரேஒரு நகர விற்பனைக் குழுவால் 36ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வு செய்து, விற்பனை செய்யும் மண்டலம் அல்லது விற்பனை செய்யக்கூடாத மண்டலமாக வரையறுக்கும் பணியை மேற்கொள்ள முடியாது. எனவே, மண்டலத்திற்கு ஒரு நகர விற்பனைக் குழு அமைக்க வேண்டும். மேலும், மண்டலங்களில் உள்ள விற்பனைக்குழுவிற்கு சம்மந்தப்பட்ட வட்டார துணை ஆணையர்களே விற்பனைக்குழுவின் தலைவர்களாக இருப்பார்கள். நகரவிற்பனைக்குழுவை 2 மாதங்களில் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மண்டல நகர விற்பனை குழுவில் அரசு தரப்பில் 8 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சாலையோர வியா பாரிகளில் இருந்து 6 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது, பெண் ஒருவர், மாற்றுத்திறனாளி ஒருவர், சிறுபான்மையினர் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியை சார்ந்த ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோரில் ஒருவர், பொது வகுப்பினர் ஒருவர் என 6 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுhவர்கள். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16.6.2025 முதல் 18.6.2025 வரை நடைபெறும். மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 19 அன்று மனுக்கள் பரி சீலனை செய்யப்படும். 20ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 26ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மண்டல அலுவலகங்களில் தேர்தல் நடைபெறும். 27ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மெரினாவில் ரோப்கார் மன்றக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த மேயர், “ மெரினா கடற்கரையில் ரோப் கார் அமைப்பது தொடர்பான சாத்திய கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்” என்றார்.