திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நகர நில வரித்திட்ட அலுவலகத்திற்கு நில அளவை, பட்டா, பெயர் மாற்றம் செய்ய பொதுமக்கள் தினசரி வருகின்றனர். பொது மக்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, நில அளவையாளர் நெடுஞ் செழியன் முறைகேடு செய்ததால், பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த அலுவலகம் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால் பொது மக்கள், தங்கள் அவசிய வேலைகள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.