tamilnadu

img

ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடித்திடுக கடலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடித்திடுக கடலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடலூர், மே 27-  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15- வது ஊதிய  ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க கோரி சிஐடியு சார்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை (மே 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற துறை ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும், தனியார் மற்றும் ஒப்பந்த நடைமுறையை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், வாரிசு வேலையை முறையாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோர் டி ஏ வை முழுமையாகவும், டி.ஏ  உயரம் பொழுது உடனடியாகவும் வழங்க வேண்டும், சொசை ட்டிக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விழுப்புரம் கோட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மண்டலத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக, கடலூரில் மண்டல துணைப் பொதுச் செயலாளர் பி.கண்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் தேவராஜிலு, துணை பொதுச் செயலாளர்  ராமமூர்த்தி, கடலூர் பணிமனை தலைவர் சபியுல்லா,பணிமனை துணை தலைவர் பாஸ்கர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர்  பழனிவேல்,  மண்டல பொதுச் செயலாளர் பி.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.